close
Choose your channels

தீர்ந்தது பிரச்சனை. விக்ரம்-ஆனந்த் ஷங்கர் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

Monday, July 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கவிருந்தது. ஆனால் இந்த படத்தை தயாரிப்பது குறித்து கலைப்புலி எஸ். தாணுவின் சகோதரர் நிறுவனம் மற்றும் ஐங்கரன் இண்டர்நேஷனல் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களும் தற்போது பிரச்சனைகளை பேசி சரிசெய்துவிட்டதாகவும், இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் வாரம் முதல் மலேசியாவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பிந்துமாதவி நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் தாடி வைத்த கெட்டப்புடன் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக விக்ரம் தற்போது முதல் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.