close
Choose your channels

தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

Saturday, May 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 759 எனவும், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,512ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 759 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 624 பேர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9989ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 363 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 7491 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது

மேலும் இன்று 11872 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 379,811 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.