close
Choose your channels

சிறுமியை பணிக்கு அமர்த்திய விவகாரம்: பானுப்ரியா மீது நடவடிக்கையா?

Wednesday, January 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், ஒரு வருடமாக சிறுமிக்கு சம்பளம் தராமல், குடும்பத்தினர்களையும் பார்க்க அனுமதிக்காமல் துன்புறுத்தியதாகவும் அந்த சிறுமியின் தாயார் திடுக்கிடும் புகார் ஒன்றை ஆந்திர காவல்துறையினர்களிடம் அளித்தார்

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் நடிகை பானுப்ரியா தனது வீட்டில் 14வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியது தவறு என ஆந்திர குழந்தைகள் நலத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் நடிகை பானுப்ரியா மீது மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை பானுப்ரியா, 'தன்னுடைய வீட்டில் வேலை பார்த்த சிறுமி விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றதாகவும், இதுகுறித்து நாங்கள் போலீசில் புகார் அளிக்க முயன்றபோது அந்த சிறுமியின் தாயார் மன்னிப்பு கேட்டு பொருட்களை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் ஆந்திராவுக்கு சென்றவுடன் என் மீது பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.