close
Choose your channels

நடிகர் கார்த்திக் சகோதரர் மதுரையில் திடீர் கைது

Monday, October 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அலைகள் ஓய்வதில்லை தொடங்கி சமீபத்தில் வெளிவந்த 'அனேகன்' வரை பல படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக். இவருடைய சகோதரர் கணேஷ் முத்துராமன் கொடைக்கானலில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த கணேஷை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரது கைப்பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தபோது, 'இது தன்னுடைய கைப்பை இல்லை என்றும் தனது சகோதரர் கடந்த முறை கொடைக்கானல் வந்தபோது தனது ஓட்டலில் இதனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டதாகவும், அதை திருப்பி கொடுக்கவே தான் சென்னை செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பையில் இருப்பது தோட்டாக்கள் என தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர், நடிகர் கார்த்திக்கை தொடர்பு கொண்டபோது, அந்த கைப்பை தன்னுடையதுதான் என்றும் துப்பாக்கி வைத்து இருக்க தன்னிடம் லைசென்சு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன்பின்னர் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கி தோட்டாக்களை விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததாக கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.