close
Choose your channels

நள்ளிரவில் ஹன்சிகா செய்தது என்ன? வைரலாகும் வீடியோ

Tuesday, July 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஹன்சிகா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபடும் தன்மை கொண்டவர் என்பதை அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போது ஒரு குழந்தையை தத்து எடுத்து ஹன்சிகா வளர்த்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் சென்னையில் சாலையோரங்களில் தூங்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த ஹன்சிகா, நள்ளிரவில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி சென்று தூங்கிக்கொண்டிருக்கும் பொதுமக்களின் அருகே போர்வை மற்றும் தண்ணீர் பாட்டில்களை வைத்துள்ளார்.
தூங்குபவர்களை எழுப்ப மனமில்லாமல் போர்வை மற்றும் தண்ணீர் பாட்டில்களை அவர்கள் அருகே வைத்துவிட்டு விழித்திருப்பவர்களுக்கு மட்டும் கையில் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் ஹன்சிகாவின் சேவையை பலர் சமூக இணையதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.