close
Choose your channels

நட்பின் அடிப்படையில் படுக்கையறை வரை சென்ற நடிகை.. இப்போது சிறையில் கம்பி எண்ணும் சோகம்..!

Monday, March 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா நடிகை ஒருவர் நட்பின் அடிப்படையில் தனது தோழி ஒருவரின் படுக்கையறை வரை சென்ற நிலையில் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள பிரசாத் பாபு என்பவர் வீட்டில் கடந்த மாதம் திடீரென கிலோ கணக்கில் தங்கம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தேகத்திற்குரியவர்கள் யார் யார் என்று விசாரணை செய்த நிலையில் அவரது வீட்டிற்கு அடிக்கடி நடிகை சௌமியா என்பவர் வந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

பிரசாத் பாபுவின் மகள் மௌனியாவின் தோழியான இவர் அடிக்கடி தனது தோழியை பார்க்க வருவார் என்றும் அப்போது படுக்கையறையை கூட பயன்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. பல மணி நேரமாக அவர் படுக்கை அறையில் இருந்த போது தான் அவர் எங்கள் வீட்டின் படுக்கை அறையில் உள்ள லாக்கரை எப்படி திறப்பது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் இருப்பதாக பிரசாத் பாபு காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் சௌமியாவை தேடி வந்த நிலையில் அவர் கோவாவில் இருப்பதாக தகவல் வந்தது. உடனே கோவா சென்று போலீசார் அவரை கைது செய்த நிலையில் வெறும் 75 கிராம் மட்டுமே அவர் வைத்திருந்ததாகவும் மீதமுள்ள நகைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சினிமா நட்சத்திர மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமடைந்த சௌமியா தற்போது திருட்டு வழக்கில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.