close
Choose your channels

ஒரு கூட்டம் என்னை 2-வது திருமணம் செய்ய சொல்கிறது: நடிகை மேக்னா ராஜ்

Tuesday, August 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு கூட்டம் என்னை இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறது என்றும், இன்னொரு கூட்டம் குழந்தைக்காக வாழுங்கள் என்று சொல்கிறது என்றும் நடிகை மேக்னா ராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை கடந்த 2018-ஆம் ஆண்டில் நடிகை மேக்னா ராஜ் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு திடீரென சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது மேக்னாராஜ் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அதன் பின் சில மாதங்கள் கழித்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கணவரை இழந்த சோகத்தில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு உள்ள மேக்னா ராஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் தனது குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் மேக்னாராஜ் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ’குழந்தையை வளர்ப்பது மற்றும் குழந்தையின் எதிர்காலம் பற்றி சிந்திப்பது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு கூட்டம் என்னை இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறது, ஆனால் இன்னொரு கூட்டமோ மகனுக்காக மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று சொல்கிறது. நான் எதை கேட்பது என்று தெரியவில்லை. இரண்டாவது திருமணம் குறித்த கேள்வியை என்னிடம் இன்னும் நான் கேட்கவில்லை. இந்த தருணத்தை சந்தோஷமாக வாழ்ந்து விட வேண்டும் என்று என் கணவர் சொல்வார், அதனால் நாளை நடப்பதை பற்றி நான் எதையும் யோசிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.