close
Choose your channels

பட்டுப் புடவையில் ஜொலிக்கும் சிரிப்பழகி நடிகை… வைரல் புகைப்படம்!

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

90 கிட்ஸ்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவரது சிரிப்பில் மயங்கிப்போன ரசிகர்கள் இவருக்கு சிரிப்பழகி, புன்னகையரசி எனப் பல பட்டப்பெயர்களை கொடுத்து இருந்தனர். மேலும் கவர்ச்சிக் காட்டாத தனது திறமையான நடிப்பில் மூலம் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருந்தார். அந்த வகையில் "என்னவளே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பு திறமையால் பேசப்படும் நடிகையாக மாறினார். இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் சில முக்கியக் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ்ஷுடன் “புதுப்பேட்டை“ திரைப்படத்தில் தில்லான கேரக்டரில் நடித்து இருந்த நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு "பட்டாஸ்" படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார்.

தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது நேரத்தை படு ஜாலியாக செலவழித்து வரும் நடிகை சினேகா தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் பச்சைநிறப் பட்டு புடவை அணிந்து நடிகை சினேகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்று இருக்கிறது. மேலும் தமிழ் சினிமா உலகில் நடிகை சினிமா முன்னணி இடத்தைப் பிடித்து இருந்தபோது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் இருப்பது ரசிகர்களிடம் படு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.