close
Choose your channels

மருத்துவமனையில் படுத்த படுக்கையாய்.. என்ன ஆச்சு நடிகை சுனைனாவுக்கு?

Saturday, October 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சுனைனா மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்

‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பிறகு ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ விஜய் நடித்த ’தெறி’ உட்பட பல திரைப்படத்தில் சுனைனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’லத்தி’ ’ரெஜினா’ ஆகிய படங்களிலும் சுனைனா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுனைனா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவருக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்கும் காட்சியும் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் விரைவில் குணமாகி வீடு திரும்பவும் அவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டும் இது திரைப்படத்தின் படப்பிடிப்பா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். ஆனால் சுனைனா விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.