close
Choose your channels

31 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த இளையராஜா-பாரதிராஜா.. என்ன படம் தெரியுமா?

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில் கடந்த 31 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணி புரிகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பாரதிராஜா மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்றும் பாரதிராஜா இயக்குனர் ஆக அறிமுகமான ’பதினாறு வயதினிலே’ திரைப்படத்திலிருந்து அவர் இயக்கிய 11 படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ’நாடோடி தென்றல்’ என்ற திரைப்படத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில் தற்போது மீண்டும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ’மார்கழி திங்கள்’ என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 31 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜா மற்றும் இளையராஜா ஒரே படத்தில் இணைந்து பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ளதாகவும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.