close
Choose your channels

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனுஷ்: இனி வெற்றிமயம் தான்!

Saturday, July 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் தனுஷ் மீண்டும் படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் அதிலும் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்க இருப்பதாகவும் இந்த 3 படங்களையும் மூன்று பிரபல இயக்குனர்கள் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கி முதல்முறையாக ‘3’ என்ற படத்தை தயாரித்தார். அதன்பின் எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி உள்பட பல திரைப்படங்களை தயாரித்தார்.

கடந்து 2018 ஆம் ஆண்டு வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'மாரி 2’. அதன் பின்னர் அவர் நான்கு ஆண்டுகளாக தனுஷ் படங்கள் தயாரிக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மூன்று படங்களை தனுஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று படங்களிலும் தனுஷ் நடிக்க உள்ள நிலையில் இந்த படங்களை வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மற்றும் எலான் இயக்க இருப்பதாகவும் இந்த படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் உள்ளிட்ட இயக்குனருடன் கைகோர்த்திருப்பதால் இனி அவருக்கு வெற்றி மயம் தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.