close
Choose your channels

கமல், விஜய்யை அடுத்து அள்ளிக்கொடுத்த சிவகார்த்திகேயன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு பெரிய தொகையை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் நாசர் தலைமையில் நடிகர் சங்கம் பொறுப்பேற்றவுடன் நடிகர் சங்கத்திற்காக ஒரு மிகப்பெரிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அந்த கட்டிடத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் பொருளாதார பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிரபல நடிகர்களிடம் தலா ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி, அந்த பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு, அதன் பின்னர் அந்த கட்டிடத்தில் இருந்து வரும் வருமானத்தில் இருந்து வாங்கிய கடனை திருப்பி கொடுத்து விடலாம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டனர். இந்நிலையில் முதல் நபராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர்களும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கினர்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகளுக்காக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என்று விஷால் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.