close
Choose your channels

கார்த்தி, சிவகார்த்திகேயனை அடுத்து இந்த இரண்டு நடிகர்கள் தான்: அதிதிஷங்கர்

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ’மாவீரன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி, சிவகார்த்திகேயனை அடுத்து தான் நடிக்க விரும்பும் இரண்டு நடிகர்களை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ’விருமன்’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார். அவருடைய நடிப்பு டான்ஸ் அனைத்துமே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதனை அடுத்து தற்போது தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘மாவீரன்’ படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் நடிகையாக அறிமுகமான நான், சூர்யாவுக்கு ஜோடியாகவும் விரைவில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் என்றும் அவரது நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவருடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று எனக்கு ஆசை என்றும் அதிதி ஷங்கர் இன்னொரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் கார்த்தி, சிவகார்த்திகேயனை அடுத்து சூர்யா, விஜய் படங்களில் நடிக்க அதிதி விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos