close
Choose your channels

நடிகர் சங்க கட்டிடம்.. அமைச்சர் உதயநிதியை அடுத்து கமல்ஹாசன் செய்த உதவி..!

Saturday, March 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் நிதி நெருக்கடி காரணமாக இந்த கட்டிடத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு தற்போது மீண்டும் நடிகர் சங்க நிர்வாகிகள் முயற்சி எடுத்து வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்ததாக தகவல் வெளியானது.அமைச்சர் உதயநிதி கொடுத்த ஒரு கோடி ரூபாய் காசோலையை நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகிய நடிகர் சங்க நிர்வாகிகள் பெற்றுக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதியை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை கமல்ஹாசன் அலுவலகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கிய நிலையில் அதனை பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினராகவும் மூத்த உறுப்பினராகவும் கமல்ஹாசன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.