close
Choose your channels

பிங்க் பால் போட்டியில் ஜொலிக்குமா? புது நெருக்கடியில் இந்தியக் கிரிக்கெட் அணி!

Thursday, February 18, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகக் கோப்பை டெஸ்ட் தொடர் போட்டிக்கான நுழைவினைப் பெறும் நோக்கில் இந்திய அணி இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. இந்த நோக்கத்தை அடைய தற்போது 1-1 என்ற சமன் வெற்றிப் பெற்று இருக்கும் இந்திய அணி, அடுத்து நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை உறுதியாகப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இந்தியக் கேப்டன் விராட் கோலி அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வந்து இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிகளின்போது சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்குதான் ஏற்றது என்றும் வேகப்பந்துக்கு ஏற்ற விஷயங்கள் இதில் இல்லை என்றும் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இந்த மைதானத்தில் ஸ்விங் ஆகும் விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன என்றும் இங்கிலாந்து வீரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

தற்போது 3 மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிகளுக்காக இரு அணிகளும் அகமதாபாத் செல்ல உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள “மோதேரா” மைதானத்தில்தான் அடுத்த 2 போட்டிகளும் நடைபெற உள்ள நிலையில் அந்த மைதானத்தைக் குறித்த சில தகவல்கள் தற்போது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

அதாவது மோதேரா மைதானத்தில் அடுத்த 2 போட்டிகளும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன. எனவே இதில் பிங்க் பந்து மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு பிங்க் பந்து போட்டிகளில் இந்தியக் கிரிக்கெட் அணி கடுமையாக சொத்திப்பி இருக்கும் நிலையில் தற்போது பிங்க் பந்து போட்டி நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சில் படு திறமையாகச் செயல்படும் என்பதால் இந்திய அணிக்கு இது கடும் நெருக்கடியை உருவாக்ககலாம். இதனால் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகிய 2 ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் போட்டியில் இடம்பெற நினைக்கும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பிங்க் பால் போட்டி நெருக்கடியை உருவாக்கும் என்றே சிலர் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.