close
Choose your channels

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு நிரந்தரமாகிவிட்டதா? ஒரே ஒரு வார்த்தையால் ரசிகர்கள் அதிர்ச்சி

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 18 ஆண்டுகளாக ஒற்றுமையான தம்பதிகளாக இருந்த நிலையில் திடீரென இருவரும் பிரியஇருப்பதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு பெற்றோரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் இணைத்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருவரும் சட்டப்படி இன்னும் விவாகரத்து மனு தாக்கல் செய்யாததால் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனுசை பிரிவதாக அறிவித்த போதிலும் ஐஸ்வர்யா தனுஷ் என்று தனது சமூக வலைதளங்களில் பெயரை மாற்றாமல் இருந்த ஐஸ்வர்யா திடீர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்ததை அடுத்து இருவரும் பிரிவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் .

தனுஷ் என்ற ஒரே ஒரு வார்த்தையை மாற்றி ரஜினிகாந்த் என்ற வார்த்தையை இணைத்ததன் மூலம் இந்த பிரிவு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்து வருவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும் தாங்கள் நம்பிக்கையோடு இருப்பதாகவும் இருவரும் இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும் ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.