close
Choose your channels

 தனுஷ் குடும்பத்தினர்களையே அசர வைத்த ஐஸ்வர்யா ரஜினியின் பதிவு!

Saturday, March 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு தனுஷின் டும்பத்தினர்களையே அசர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு பெரியவர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தனுஷ் சகோதரர் இயக்குனர் செல்வராகவன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் எனது குரு, நண்பர், அப்பா அந்தஸ்தில் உள்ள செல்வராகவன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்து தனுஷின் குடும்பத்தினர் அசந்துவிட்டதாக தனுஷ் குடும்பத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.