close
Choose your channels

முதல் திருமண நாளில் குழந்தையுடன் சூப்பர் போட்டோஷூட்.. அஜய்-ஜெஸ்ஸி தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

Saturday, May 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் பாடகர் அஜய் மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி ஆகியோருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடியதோடு, குழந்தையுடன் கூடிய சூப்பர் போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா. இவர் ஜெஸ்ஸி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே ஜெஸ்ஸி கர்ப்பமானதை அறிவித்த நிலையில் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

தனது குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது ஜெஸ்ஸி மற்றும் அஜய் ஆகிய இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது அஜய் - ஜெஸ்ஸி தம்பதிகள் முதலாவது திருமண நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் குழந்தையுடன் சூப்பர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தனர்.

நாங்கள் முதல் திருமண நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறோம், எங்கள் குழந்தைக்கு நாங்கள் அயன் ஜேடன் என்ற பெயர் வைத்துள்ளோம், இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்களுக்கு அனைவரது வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள் தேவை’ என்று பதிவு செய்துள்ளனர் குழந்தைகளுடன் கூடிய அம்சமான போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.