close
Choose your channels

நாகேஷுடன் நடித்த காட்சி: மலரும் நினைவுகளை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் 

Friday, June 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவர் இயக்கிய ’ஏழாம் அறிவு’ ’துப்பாக்கி’ ’கத்தி’ உள்ளிட்ட படங்களில் அவர் ஓரிரு காட்சிகளில் தோன்றுவார் என்பதும் அந்த காட்சியை கண்டுபிடித்து ரசிகர்கள் கை தட்டி மகிழ்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் இயக்குனராகும் முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக கூறி அந்த மலரும் நினைவுகளின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’பூச்சூடவா’. அப்பாஸ் மற்றும் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை உதயசங்கர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதும் பணியை ஏஆர் முருகதாஸ் ஏற்றுக் கொண்டதாகவும் அப்போது அவருக்கு ஒரு சிறு கேரக்டரை இயக்குனர் கொடுத்ததாகவும் தெரிகிறது.

நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்துள்ள அந்த காட்சியில் சர்வராக தோன்றும் ஏஆர் முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.