close
Choose your channels

ரஜினிகாந்த் நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்..!

Sunday, February 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர் என்றும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை ஒரு மதத்திற்கு ஆதரவானவர் என்றும் சங்கி என்றும் சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இது குறித்து ‘லால்சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியவர் என்றும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ரஜினிகாந்த் குறித்து கூறிய போது ’ரஜினிகாந்த் மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ஆக வர முடியும் என்று நிரூபித்து காட்டியவர்.

ஆன்மீகத்தையும் சினிமா வாழ்க்கையையும் தனித்தனியாக பார்க்க கூடியவர். அவருடன் பேசுவது, அவர் படங்களுக்காக வேலை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியது. ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர், பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.