close
Choose your channels

அடிச்சு பழுக்க விடாதேம்மா: ரசிகரின் கமெண்ட்டுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா

Tuesday, July 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன்டிவியில் ’காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான அர்ச்சனா, அதன்பின் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய சரிகமபதநி’ என்ற நிகழ்ச்சி பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிரித்த முகத்துடன் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் வல்லவர் அர்ச்சனா என்ற பெயர் அவருக்கு உண்டு. மேலும் அவர் ’என் வழி தனி வழி’ என்ற உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுக்களை பதிவு செய்த நிலையில் ஒரு நெட்டிசன் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கமெண்ட்டை பதிவு செய்தார். அவர், ‘அடித்து பழுக்க விடாதேம்மா, இந்த இளம் தோலுக்கு இவ்வளவு மேக்கப் தகுமா?’என்று அவரது மகளுக்கு போடபப்ட்ட மேக்கப் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

நெட்டிசனின் இந்த கமெண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனா ’தனது மகள் காதணி மட்டுமே அணிந்து உள்ளார். அதில் என்ன மேக்கப் இருக்கிறது? வெறுப்புணர்ச்சியை பரப்பிவிட வேண்டாம். அடுத்த முறை நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.