close
Choose your channels

முதலில் சந்திரமுகி 2 எடுக்கவே நினைத்தேன்..! ஏ.ஆர் முருகதாஸ் பேட்டி.

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலில் சந்திரமுகி 2 எடுக்கவே நினைத்தேன்..! ஏ.ஆர் முருகதாஸ் பேட்டி.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை இயக்கியுள்ள முருகதாஸ் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். அதனாலேயே தர்பார் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இந்நிலையில் முருகதாஸ் படம் பற்றி பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் முருகதாஸ் கூறியிருப்பதாவது, ரஜினியை 50களில் இருப்பவர் போன்று காட்டுவதில் பிரச்சனையே இல்லை. அவரின் உடல்வாகு, எனர்ஜி, பேசும் ஸ்டைலை பார்த்தாலே அந்த இம்பிரஷன் நமக்கு கிடைக்கும். ரஜினி சார் ஒரே நரேத்தில் மூன்று பேரிடம் கதை கேட்பார். அதனால் அவருக்கு ஸ்க்ரிப்ட் பிடித்துவிட்டது என்றால் படம் பண்ணுவோம் என்று இல்லை. படப்பிடிப்பு துவங்கினால் தான் படம் பண்ணுகிறோம் என்பது உறுதியாகும்.

அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தை தவிர மற்றபடி ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்த படங்கள் ஓடவில்லை என்று ஒரு சென்டிமென்ட் உள்ளது. நான் துப்பாக்கி படம் இயக்கியபோதும் ஹீரோ ராணுவ வீரராக நடித்தால் படம் ஓடாது என்றார்கள். துப்பாக்கியை முன்னுதாரணமாக ரஜினி சாரிடம் கூறி சென்டிமென்ட்டை நம்ப வேண்டாம் என்றேன். ஸ்க்ரிட்ப் நன்றாக இருந்தால் இந்த படம் பண்ணலாம் என்று நான் ரஜினி சாரிடம் கூறினேன்.

நாங்கள் முதலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே திட்டமிட்டோம். எனக்கு வேட்டையன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அதனால் வேட்டையன் மற்றும் சரணவன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து படம் எடுக்க நினைத்தேன். ஆனால் அது சில காரணங்களால் நடக்கவில்லை. சந்திரமுகி 2 படத்தை ஏன் எடுக்க முடியாது என்பதற்கான காரணங்களை நான் ரஜினி சாரிடம் தெரிவித்தபோது அவர் அதை ஏற்றுக் கொண்டார் என்றார் முருகதாஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.