close
Choose your channels

பரத்துக்கு ஜோடியாகும் பஞ்சாப் நியூஸ் ரீடர்

Tuesday, June 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் புகழ்பெறும் பெரும்பாலான நடிகைகள் கேரளாவில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும் கேரளாவை அடுத்து பஞ்சாபில் இருந்து வந்தவர்களும் கோலிவுட்டில் புகழ் பெற்றுத்தான் விளங்குகிறார்கள். காஜல் அகர்வால், டாப்சி, சார்மி இவர்கள் வரிசையில் தற்போது கோலிவுட்டுக்கு அறிமுகமாகியிருக்கும் மற்றொரு பஞ்சாபி பெண் பானுஸ்ரீ மெஹ்ரா.

"வர்து" உள்பட ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா, தற்போது 'சிம்பா' என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தனக்கு நியூஸ் ரீடர் கேரக்டர் என்று கூறியுள்ள பானுஸ்ரீ மெஹ்ரா, ரொம்ப கண்டிப்பாகவும், கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒரு இளம் புரட்சி பெண்ணாகவும் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் ஸ்ரீதர் இயக்கவுள்ள இந்த படத்தில் பிரேம்ஜி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் அடங்கிய இந்த படம் சென்னை மற்றும் சீனாவில் படமாக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.