close
Choose your channels

தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: முதல்வரை சந்தித்த பின் பாரதிராஜா - சீமான் பேட்டி

Friday, June 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இயக்குனர் பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் சற்றுமுன்னர் சந்தித்தனர். தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதி கொடுத்ததாகவும் கூறிய இருவரும் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமான் கூறியபோது, ‘முதல்வரை நேரில் சந்தித்து பேசியபோது 7 பேர் விடுதலை குறித்து பேசியதாகவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு உறுதியாக இருப்பதாகவும் கண்டிப்பாக இதுகுறித்து போராடுவோம் என்று தன்னிடம் முதல்வர் கூறியதாகவும் சீமான் தெரிவித்தார்.

மேலும் அனைத்து துறைகளிலும் இந்த அரசு வேகமாக இயங்குகிறது என்றும் குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் அவரை பாராட்டுகிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையும் மீறி நல்லது செய்வதை பாராட்ட வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பாரதிராஜா கூறியபோது ’முதலமைச்சரின் செயல்பாடுகள் சரியாக உள்ளது என்றும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos