close
Choose your channels

வலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்ட காயத்ரி

Wednesday, August 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாலும் காயத்ரியை இன்னும் ஓவியா ஆர்மியினர் மன்னிக்கவும் இல்லை, மறக்கவும் இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் காயத்ரியை விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்
இந்த நிலையில் சற்றுமுன் காயத்ரி தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். 'அடுத்தவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது மிக எளிதானது. அதே சமயத்தில் நம்முடைய சொந்த தவறுகளை அடையாளம் காண்பது கடினமானது' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே காயத்ரி மீது செம காண்டாக இருக்கும் டுவிட்டர் பயனாளிகள் வரிந்து கட்டிக்கொண்டு இந்த பதிவுக்கு பதிலளித்து வருகின்றனர். நாகரீகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்று கமல் கூறியதையும் மறந்து, காயத்ரியை ஓவியா ஆர்மியினர் உள்பட பலர் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு அஜித் ரசிகர், 'தற்போது தான் விவேகம்' ரிலீஸில் பிசியாக இருப்பதாகவும், படம் பார்த்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தத்தில் காயத்ரி வலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்டதாகவே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.