close
Choose your channels

மயக்க மருந்து கொடுத்து நிர்வாண வீடியோ: கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் நடிகை குறித்து சகோதரர் புகார்!

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் இந்தி 14வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சோனாலி போகத். இவர் நடிகையாக மட்டுமின்றி பாஜகவின் பிரபலமாக இருந்தார் என்பதும் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

41 வயதான சோனாலி சமீபத்தில் கோவா சென்றிருந்த நிலையில் அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரது சகோதரர் தனது சகோதரி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் காவல்துறையிடம் கொடுத்த புகாரில், ‘சோனாலியின் உதவியாளர்கள் 2 பேர் தான் அவரை கொலை செய்ததாகவும் சோனாலிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, நிர்வாணமாக வீடியோ எடுத்து பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.