close
Choose your channels

எலிமினேஷனுக்கு முன் மீண்டும் பிரேக்கிங் நியூஸ் போட்ட கமல்ஹாசன்!

Sunday, December 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ராஜூ காப்பாற்றப்பட்டார் என்று கமல்ஹாசன் அறிவித்து இருந்ததை பார்த்தோம். ராஜூ காப்பாற்றப்பட்டதை பிரேக்கிங் நியூஸ் செய்தி போன்று கமல்ஹாசன் அறிவித்தது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும் புதுமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கடைசியாக வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய மூன்று பேரில் ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்ற நிலை உள்ளது. இந்த மூன்று பேர்களில் யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதையும் கமல்ஹாசன் இன்று மீண்டும் ஒரு பிரேக்கிங் நியூஸ் போட்டு எலிமினேஷன் செய்யப்பட்டவரை குறிப்பிடுகிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் அபிஷேக் தான் வெளியேறி விட்டார் என்று செய்திகள் கசிந்தது என்பதை ஏற்கனவே நாம் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.