close
Choose your channels

வந்தவுடன் வேலையை ஆரம்பித்த ஜூலி!

Monday, August 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்ன தான் செய்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போலவே சிலரை மாற்றவே முடியாது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. அதுபோல் என்னதான் நான் திருந்திவிட்டேன், பொய் சொல்ல மாட்டேன், புறம் கூற மாட்டேன், மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்று ஜூலி கூறினாலும் அவர் திருந்த மாட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றைய அடுத்த புரமோ வீடியோ உள்ளது.
இந்த புரமோ வீடியோவில் காஜலிடம் பேசும் ஜூலி, 'நான் முதலில் இந்த வீட்டில் உள்ளவர்களை பார்த்தபோது என்னை தவிர அனைவரும் ஸ்டாராக இருந்தனர். ஆனாலும் இந்த பிக்பாஸ் வீட்டில் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றதோ, அதே உரிமை எனக்கும் உள்ளது.
இந்த வீட்டில் எல்லோரும் என்னிடம் பாசம் காண்பித்து என்னை ஏமாற்றிவிட்டனர். ஆனால் இனிமேல் நான் ஏமாற மாட்டேன். தப்புண்ணா அண்ணனாக இருந்தாலும் நின்னு கேட்பேன்' என்று கூறினார். ஓவியாவின் பிரச்சனைக்கு அஸ்திவாரமே ஜூலி கூறிய பொய் என்பதுதான் என்று இன்னும் உணராத ஜூலி, வந்தவுடனே தனது வேலையை ஆரம்பிக்கும் வகையில் காஜலிடம் புறம் பேசியது அவர் இன்னும் ஒரு சதவீதம் கூட திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.