close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய விருந்தாளி!

Tuesday, August 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருவதால் தற்போது இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று நாமினேஷன் படலம் முடிந்து கவின் உட்பட நால்வர் நாமினேஷன் படலத்தில் சிக்கியுள்ளனர். இருப்பினும் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பதால் இந்த நாமினேஷன் படலம் தேவையில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு புதிய விருந்தாளி ஒருவர் வந்து இருக்கின்றார். அவர் தமிழர்கள் மறந்துபோன பல கிராமிய கலைகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். முதல் கட்டமாக பொம்மலாட்டம் கலையை அவர் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கற்றுத் தருகிறார். அவர் கற்றுத்தந்த இந்த கலையை ஒவ்வொருவரும் தினமும் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது பிக்பாஸ் அறிவுரையாக உள்ளது.

பிக்பாஸ் வீடு இந்த வாரம் இரண்டு கிராமங்களாக பிரிந்து கிராமிய மணம் வீசி வருகிறது. போட்டியாளர்களும் கிராமத்து உடையை அணிந்து காட்சி அளிக்கின்றனர். கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராமத்து டாஸ் நடந்தபோது சேரன் மற்றும் மீராமிதுனுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இந்த கிராம டாஸ்க்காவது சண்டை, சச்சரவு இல்லாமல் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.