close
Choose your channels

ரியோவுக்கும் பத்திக்கொண்ட பாலா பத்த வெச்ச நெருப்பு!

Friday, January 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று முன் வெளியான மூன்றாவது வீடியோவில் ரியோ மற்றும் ஆரி வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ’இதற்கு முன்னர் என்னை கூப்பிட்டு நீங்கள் எத்தனை விஷயங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்? என் மேல் உள்ள அக்கறையால் நீங்கள் சொல்கிறீர்கள் என்று மதித்து நான் அதை ஏற்றுக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் நான் உங்களிடம் கூறிய அக்கறையான ஒரு விஷயத்தை கூட நீங்கள் ஏற்றுக் கொண்டது கிடையாது என்று ரியோ ஆரி மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.

அதற்கு ஆரி, நீங்கள் கூறும் குற்றச்சாட்டு சரியாக இருந்தால் நான் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன் என்று கூற அதற்கு ரியோ, ’ஒரு தவறை சுட்டிக்காட்டினால் அந்த தவறை ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும் என்று கூற, உடனே பேச்சை மாற்றிய, நீங்கள் இதேபோன்று கூறி தான் அனிதாவை வெளியேற்றினீர்கள்’ என்று தெரிவிக்கிறார்.

அதனை மறுத்த ரியோ, ‘உங்களை ஒன்று கூறினால் அவர்களை ஏன் கூறவில்லை? என்று தான் கேட்கின்றீர்கள் தவிர, உங்களுக்கு நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிற மனசு உங்களிடம் ஏன் இல்லை என்று கேட்கிறார். உங்களிடம் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்று ரியோ அடித்துக் கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

இன்றைய முதல் மற்றும் இரண்டாவது புரமோவில் ஆரிக்கு எதிராக பாலா பற்ற வைத்த நெருப்பு தற்போது ரியோவுக்கு பற்றிக் கொண்டது என்பதும் போக போக இனி யார் யாருக்கெல்லாம் பற்றப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் ஆரிக்கு வெளியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை அனைத்து போட்டியாளர்களும் உறவினர்களின் வருகையின் மூலம் புரிந்துகொண்டு அவரை ஒட்டுமொத்தமாக டார்கெட் செய்கிறார்களோ? என்ற எண்ணம் தான் தற்போது ஏற்படுகிறது. இது ஆரிக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.