close
Choose your channels

சம்யுக்தா மேல செம காண்டா இருக்கோம்: சோம் நண்பர்கள் பேட்டி 

Sunday, November 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சோம், ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக தனது விளையாட்டை ஆரம்பித்து உள்ளார் என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த வாரம் நடந்த கேப்டன்ஷிப் டாஸ்ஸ்கில் மிக அருமையாக சோமசேகர் விளையாடினார் என்பதும், ஆனால் பாலாஜியின் தந்திரம் காரணமாக அவர் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து அவர்கள் சோம் நண்பர்கள் அளித்த பேட்டியில், ‘நாங்கள் சம்யுக்தா மீது செம காண்டா இருக்கின்றோம். அவரவர் விளையாட்டை அவரவர் விளையாடவேண்டும். பாலாஜியும் சம்யுக்தாவும் கூட்டணியாக சேர்ந்து விளையாடியதால் தான் சோம் தோல்வி அடைந்தார். இது செம காண்டாக இருக்கிறது. சோம் மட்டுமே தனியாக 200 பந்துகளை சேகரித்தார். ஆனால் பாலாஜி, சம்யுக்தா இருவரும் சேர்ந்தே 260 தான் பந்துகள் தான் சேகரித்தனர் என்றும் இது ஒரு முறையான ஆட்டம் இல்லை என்றும் தெரிவித்தனர்

மேலும் பாலாஜி குறித்து சோம் நண்பர்கள் கூறும் போது ’பாலாஜி தனக்கு அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், அவன் இவன் என்று பேசக்கூடாது என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அவரே சோம் உள்பட ஒருசிலருக்கு மரியாதை கொடுக்கவில்லை. டேய் சோமு என்று தான் பாலாஜி கூப்பிட்டார். தனக்கு மரியாதையை எதிர்பார்க்கும் பாலாஜி அதேபோல் மற்றவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற இங்கிதம் தெரியாமல் இருக்கிறார் என்று பாலாஜி மீதும் அவரது நண்பர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

மேலும் சோம், மார்ஷியல் தற்காப்பு கலையை முறையாக பயின்றவர் என்றும், ஆனாலும் அந்த கலை தெரியும் என்பதால் அடிதடியில் இறங்கக்கூடிய ஆள் இல்லை என்றும், அதே நேரத்தில் சரியான நேரத்தில் அவர் அதனை உபயோகிப்பார் என்றும் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.