close
Choose your channels

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? அன்பு குரூப் மேலும் உடையுமா?

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் காரசாரமாக நடந்தது என்றும் அர்ச்சனா மற்றும் ரியோ ஆகிய இருவரையும் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்தனர் என்பதை இன்றைய புரோமோ வீடியோக்களில் இருந்து தெரிந்து கொண்டோம்.

இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களின் நாமினேஷன் குறித்த முழு விபரங்கள் வெளிவந்துள்ளது. இந்த வார நாமினேஷனில் அர்ச்சனா, ஆரி, பாலா, ரியோ மற்றும் ஷிவானி ஆகிய 5 பேரும் சிக்கியுள்ளனர். அதேபோல் அனிதா, சோம், ஆஜித், கேபி மற்றும் ரம்யா ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஆரியை ஐந்து பேர்களும், அர்ச்சனாவை 4 பேர்களும், ரியோவை 4 பேர்களும் பாலாஜி மற்றும் ஷிவானியை தலா இரண்டு பேர்களும் நாமினேட் செய்துள்ளனர். அன்பு குரூப்பின் தலைவியே நாமினேஷனில் சிக்கியுள்ளதால் அவரை வெளியேற்றுவோம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்றாலும் இந்த வாரம் வெளியேறுவது யார்? ஒருவேளை இந்த வாரமும் டபுள் எவிக்சனா? என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.