close
Choose your channels

அடிக்க அடிக்க நான் வந்துகிட்டே இருப்பேன்: அபிஷேக் ஆவேசம்

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் தங்களுடைய கதையை கதையை கூறி வருகிறார்கள் என்பதும் தாங்கள் சந்தித்த சவால்கள், நேர்ந்த துன்பத்தை உருக வைக்கும் அளவிற்கு தெரிவித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் தாமரைசெல்வி தன்னுடைய சோகமான கதையை கூறிய நிலையில் இரண்டாவது புரோமோவில் அபிஷேக் சற்று ஆவேசமாக தனது கதையை கூறுகிறார்

கடவுள் மேல வைக்குற நம்பிக்க மேல நம்பிக்கை இருக்கு என்று புரிந்தும் புரியாமலும் தனது கதையை தொடங்கிய அபிஷேக், ‘இந்த பில்டிங்ல இருக்கிற ஒவ்வொரு செங்கல்லும் எங்கள் அப்பா ரத்தம், நான் எவனையும் ஏமாற்றி சம்பாதிக்கவில்லை என்றும் அடிக்க அடிக்க வந்துகிட்டே இருப்பேன், இதுதான் நான் என்றும், பிடிச்சிருக்கா பிடிக்கலையா வேறுவழியில்லை’ என்று கூறுகிறார்

அபிஷேக்கின் இந்த கதை குறித்து ராஜூ ஜெயமோகன் மற்றும் இமான் அண்ணாச்சி இருவரும் கலந்து பேசுகின்றனர். அதில் ’நமக்கு தேவையோ தேவையில்லையோ சில பொருட்களை விற்பதற்காக சிலர் வருவார்கள், அவர்கள் நம்மை வாங்க வைத்து விடுவார்கள். அது மாதிரி அபிஷேக் தன்னுடைய கதையை ஆரம்பிக்கும்போது இருந்தது என ஜெயமோகன் கூறுகிறார்

இதனை அடுத்து ’அவன் சொன்ன கதையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு லைன் மட்டுமே என்றும் இரண்டு வருடத்தில் நான் உழைத்து மீட்பேன் என்று கூறினானே அதுதான் எனக்கு பிடித்திருந்தது என்று இமான் அண்ணாச்சி பதில் சொல்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.