close
Choose your channels

ரம்யா கிருஷ்ணன் முன்னிலையில் சிபிக்கு அக்சரா கொடுத்த பனிஷ்மெண்ட்!

Sunday, November 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோவில் சிபி உட்பட நால்வருக்கும் அக்சரா பனிஷ்மென்ட் கொடுக்கும் காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான ’கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கில் அக்சரா 5 திருக்குறள்களை ஒப்புவிக்க வேண்டும் என்று கறாராக சிபி கூறியிருந்தார் என்பதும் இதனால் சிபி மற்றும் அக்சரா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் வார்டன் சிபி மற்றும் ஆசிரியர்கள் அபிஷேக், ராஜூ, அமீர் ஆகிய அனைவரும் தன்னிடம் ஐந்து திருக்குறள்களை ஒப்புவிக்க வேண்டும் என ரம்யா கிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் ராஜூ, சிபி, அபிஷேக் மற்றும் அமீர் ஆகியோர் தங்களுக்கு திருக்குறள் தெரியாது என்று கூறி பனிஷ்மெண்ட்டை ஏற்று கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து நால்வருக்கும் என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம் என ரம்யா கிருஷ்ணன் அக்சராவிடம் கேட்க நான்கு பேரையும் இன்று வெளியே படுக்க சொல்லுங்கள், அதுதான் பனிஷ்மெண்ட் என்று அக்சரா கூறுகிறார். திருக்குறள் சொல்லாத்தால் தனக்கு பனிஷ்மெண்ட் கொடுத்த சிபி மட்டுமின்றி நால்வரையும் பழிவாங்குவதற்கு கிடைத்த சரியான சந்தர்ப்பததை அக்சரா பயன்படுத்தி கொண்டதாகவே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.