close
Choose your channels

உன்கிட்ட ஒண்ணுமே இல்லை, ஸ்வாஹா: தாமரையை சீண்டிவிட்ட பிரியங்கா!

Friday, October 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உங்ககிட்ட ஒண்ணுமே இல்ல, எங்க கிட்ட தான் எல்லாமே இருக்கு என தாமரையை பிரியங்கா சீண்டி விட்டதால் கொதித்தெழுந்த தாமரை பேசும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக நகரத்தார் மற்றும் கிராமத்தார் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நகரத்தார் நன்றாக விளையாடி ஸ்கோர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பிரியங்கா பேசியபோது, ‘இந்த சீசன் 5ல் நகரத்தார் அணி தான் நன்றாக விளையாடி வருகிறது. அதற்கு சாட்சியாக ஐந்து காயின்களும் எங்களிடம் தான் உள்ளது என நடுவர் இசைவாணியையும் சேர்த்து பிரியங்கா கூறுகிறார்.உடனே சூடான தாமரை, ‘உங்களிடம் 3 காயின்கள் தான் உள்ளது, ஏன் எல்லா காயினும் உள்ளது என்று பொய் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்.

அதன்பின் ஸ்ருதி எழுந்து ஒரு எமோஷனல் பாண்ட்னா அதை வந்து மத்த டீம் வெளியில இருக்கும் போது காட்டணும் என்று கூற மீண்டும் சூடான தாமரை, ‘கமல் சார் அதை பத்தி பேசற வரைக்கும் பேசக்கூடாது என்று இருந்தேன் என்று சண்டைக்கு செல்கிறார். மொத்தத்தில் பிரியங்கா தாமரையை சீண்டிவிட்டு கொளுத்திப் போட அது நன்றாக வேலை செய்து தாமரையை ஆவேசப்படுத்தியுள்ளது என்பது இன்றைய முதல் புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.