close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பு!

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் ஓபனிங் வசூல் தென்னிந்திய அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் தொடங்கிய நாளில் இருந்தே பல பிரச்சினைகளை சந்தித்து வந்தது. அவற்றில் ஒன்று இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2.15 மணிக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே பிகில்’ படக்குழுவினர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரியவரும். இந்த நிலையில் ‘பிகில்’ படத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.