close
Choose your channels

கொரோனா எதிரொலி: தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட அமிதாப்

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறும், அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

இதனை அடுத்து சாதாரண குடிமக்கள் முதல் முக்கிய விவிஐபிக்கள் வரை கடந்த சில நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் மும்பை மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமன்றி பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோன வைரஸின் பாதிப்பை பாப்பை உணர்ந்து, தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் சுயகட்டுப்பாட்டுடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.