close
Choose your channels

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என 3 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

Wednesday, September 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என மூன்று வருடங்களுக்கு முன்பே நான் கூறியிருக்கிறேன் என்று ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. திரையுலகிலும் சிலர் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் குறித்து கூறிய போது ’இந்தியாவை பாரத் என்று அழைக்க வேண்டும் என்று நான் மூன்று வருடங்களுக்கு முன்பே கூறிக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலேயர்கள் பாரத் என்று உச்சரிக்க முடியாததால் இந்தியா என்று பெயர் சூட்டினார்கள். இந்தியா என்பதற்கு அடிமை என்ற பெயர்.

ஆனால் நான் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்கும் நிலையில் உள்ளோம், எனவே நாம் நமது ஒரிஜினல் பெயரான பாரத் என்பதை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

கங்கனாவின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.