close
Choose your channels

பழம்பெரும் நடிகரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Wednesday, June 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வறுமையில் வாடும் பழம்பெரும் நடிகர் ஒருவரின் பேரனுக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரன் சாய்ராம் என்பவர் வறுமையில் கஷ்டப்படுவதாக சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார், தியாகராஜ பாகவதர் அவர்களின் இரண்டாவது மனைவியின் மகள் வழி பேரனான சாய்ராம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் தொழில் செய்து வந்ததாகவும் ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் தான் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுவதால் செக்யூரிட்டி உள்ளிட்ட ஒரு சில பணிகளை செய்து வருவதாகவும் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருவதாகவும் அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த செய்தியை ஊடகங்கள் மூலம் அறிந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரனுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் அவருக்கு வீடு ஒதுக்கவும் முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம் முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.