close
Choose your channels

இறுதி போட்டிக்கு 5வது போட்டியாளர்: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் செம டுவிஸ்ட்!

Sunday, March 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் அடுத்த வாரம் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கனி, அஸ்வின் மற்றும் பாபா பாஸ்கர் ஆகிய மூவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடந்த வைல்ட்கார்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஷகிலாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனை அடுத்து அவர் இறுதிப்போட்டியாளர்களுடன் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் போது நடுவர்களில் ஒருவரான செஃப் தாமு அவர்கள் ஒரு செம ட்விஸ்ட் வைத்தார். அதாவது இந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு செல்பவர்கள் நான்கு போட்டியாளர்கள் அல்ல என்றும், 5 போட்டியாளர்கள் என்றும் அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

இறுதிப்போட்டிக்கு செல்லும் 5வது நபர் யார் என்பதை முடிவு செய்வதற்காக பவித்ரா மற்றும் ரித்திகா இடையே ஒரு சமையல் போட்டி வைக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவித்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதனையடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எனவே ’குக் வித் கோமாளி சென்று நிகழ்ச்சியில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய ஐவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதும், இவர்களில் டைட்டிலை வெல்பவர் யார்? என்பது அடுத்த வாரம் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.