close
Choose your channels

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் மாஸ் தகவல்!

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களுக்கு பின்னர் தனுஷ் மற்றும் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ள படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதனை அடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கி ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் நடித்து முடித்துள்ள ’தி க்ரே மேன்’ மற்றும் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் என்பது அவர் ’வாத்தி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.