இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துக்க நிகழ்வு.. திரையுலகினர் இரங்கல்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இயக்குனர் ஹரி வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்கு திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஹரி என்பதும் அவர் தற்போது விஷால் நடித்து வரும் ‘விஷால் 34’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.
இந்நிலையில் இயக்குனர் ஹரியின் தந்தை விஆர் கோபாலகிருஷ்ணன் என்பவர் வயது மூப்பு காரணமாக சற்றுமுன் காலமானார். ஹரியின் தந்தை மறைவு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஹரியின் தந்தை உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மறைந்த கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஹரியுடன் சேர்த்து ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஹரியின் இல்லத்தில் தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.