close
Choose your channels

அதை பார்த்த அடுத்த நொடியில் யுத்ததத்தை அறிவித்தான் கர்ணன்: மாரி செல்வராஜ் டுவீட்

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கர்ணன்’. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை உள்பட அனைத்து ஏரியாக்களின் வியாபாரம் முடிந்து விட்டது என்பதும் ரிலீசுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படம் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மண் புழுக்களை அள்ளி எடுத்த ஒருவன் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் மீன் முள்ளில் கோர்த்ததை பார்த்த அடுத்த நொடியில் தன் யுத்ததத்தை அறிவித்தான் கர்ணன், 9.4. 2021 கர்ண வருகை’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.