close
Choose your channels

இப்போதைக்கு அப்டேட் கேட்காதீங்க.. காரணம் சொன்ன 'கோட்' இயக்குனர் வெங்கட் பிரபு..!

Monday, March 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டு படக்குழுவினர்களை தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்போதைக்கு அப்டேட் கேட்க வேண்டாம் ஆனால் நீங்கள் எதிர்பாராத மாஸ் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘கோட்’ படத்திற்காக ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள ஒரு குழுவிடம் கிராபிக்ஸ் பணிகளின் ஒரு பகுதியும் இந்தியாவில் உள்ள ஐந்தாறு நிறுவனங்களில் சில கிராபிக்ஸ் பணிகளையும் ஒதுக்கி உள்ளோம்.

எனவே இப்போதைக்கு அப்டேட் யாரும் தயவு செய்து கேட்க வேண்டாம், ஆனால் அதே நேரத்தில் ஒரு பண்டிகை திருவிழாவின் போது சாதாரண போஸ்டர் வெளியிடாமல் ஒரு பெரிய அப்டேட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை காத்திருக்கவும்’ என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ‘கோட்’ படத்தின் அப்டேட்டுகளை கேட்டு வரும் நிலையில் வெங்கட் பிரபு இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, கனிகா என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.