close
Choose your channels

நான் இனிமேல் அழமாட்டேன்: கணவரின் நினைவு நாளில் நெகிழ்ச்சியான பதிவு செய்த சேதுராமன் மனைவி!

Saturday, March 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் இனிமேல் அழ மாட்டேன் என கணவரின் நினைவு நாளில் நடிகரும் டாக்டருமான சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சியான பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த டாக்டர் சேதுராமன் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி திரையுலகினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் சேதுராமன் மரணம் அடைந்தபோது அவரது மனைவி உமா 5 மாத கர்ப்பமாக இருந்தார் என்பதும் அதன் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பெற்ற போது தனது கணவரே மீண்டும் திரும்பி வந்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சேதுராமனின் 2வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் உமா தனது சமூக வலைத்தளத்தில், ‘நான் இனிமேல் அழ மாட்டேன் என்றும் நான் அழுதால் இந்த உலகைவிட்டு சென்ற எனது கணவரின் ஆத்மாவுக்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும் நாம் ஒரு ஆத்மாவை தான் இழந்தோம், ஆனால் அவரோ தான் சேர்த்து வைத்து இருந்த அத்தனையும் ஆத்மாக்களையும் பிரிந்து சென்று விட்டதால் அவருக்கு தான் வலி அதிகம் என்றும் உமா பதிவு செய்துள்ளார். இந்த பதிவை படிக்கும்போது கண் கலங்குவதாக பலர் கமென்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.