close
Choose your channels

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? பிரபல இயக்குனர் விளக்கம்

Monday, October 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் சூப்பர் ஹிட் பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிரமாக கமல் ரசிகராம். இவர் மட்டுமின்றி இவருடைய தந்தையும் கமல்ஹாசன் மீது மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றனர். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல், நேரம் கிடைக்கும்போது இந்த படத்தை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் கமலின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிக், விளக்க அறிக்கை ஒன்றினை பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'எங்கள் படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் டாக்டர். கமல்ஹாசன் அவர்களின் ஆசி பெற அணுகிய போது பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு எங்களைச் சந்தித்தார்.

அவருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நனவானதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீளிப்பதாக கூறினார்.இந்நிலையில் இன்று ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

சினிமா வாழ்வில் ஆரம்பகட்டதில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது. நானும் என் தந்தையும் என்றென்றும் உலகநாயகனின் உண்மையான மற்றும் நேர்மையான ரசிகர்கள். இந்தச் செய்தி பிரசுரத்தமையால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்' இவ்வாறு ஆதிக் ரவிச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.