close
Choose your channels

முதல் படம், 50வது படம், 100வது படம்: வெங்கட்பிரபுவுடன் இணைந்த பிரபலம்!

Wednesday, July 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர் ஒருவர், அவரது 50வது படத்திலும் 100வது படத்திலும் வெங்கட்பிரபு உடன் பணிபுரிந்த அபூர்வ ஒற்றுமை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

வெங்கட்பிரபு இயக்கிய முதல் திரைப்படமான ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் எடிட்டராக அறிமுகமானவர் பிரவீன் கே.எல். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ என்ற திரைப்படத்திலும் எடிட்டராக பணிபுரிந்தார் என்பதும், இந்த படம் அவரது ஐம்பதாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது வெங்கட் பிரபு நடிப்பில் சிம்பு நடித்து வரும் ’மாநாடு’ திரைப்படத்திற்கும் பிரவீன் கே.எல். தான் எடிட்டர் என்பதும் இந்தப் படம் பிரவீன் அவர்களின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே முதல் படம், 50வது படம், நூறாவது படம் என வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றிய பிரவீனை வாழ்த்தி வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவருடன் இணைந்து மேலும் பல திரைப்படங்களில் பணிபுரிய ஆவலாக இருப்பதாகவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.