close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திடீர் சிக்கல்! படப்பிடிப்பு நிறுத்தமா?

Friday, June 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் வந்தது. அரசியல் கட்சிகள், ஒருசில அமைப்புகள் இந்தநிகழ்ச்சியை எதிர்த்து போராட்டம் செய்தன. ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை

இந்த நிலையில் பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்தில் பெப்சி அமைப்பினர் பிரச்சனை செய்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. 'பிக்பாஸ் 2' படப்பிடிப்பில் பணிபுரிபவர்களில் 75% மும்பையில் இருந்து வந்தவர்கள் என்றும், இது பெப்சியின் விதிமுறைகளுக்கு முரணானது என்றும், அதனால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பெப்சி நிர்வாகிகள் பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெப்சி நிர்வாகி ஒருவர் கூறியபோது, 'இதுவரை நாங்கள் பிக்பாஸ் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. ஆனால் பெப்சி தொழிலாளர்களை சரியான அளவில் பயன்படுத்தவில்லை என்றால் இனிவரும் நாட்களில் நடைபெறும் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம்' என்று கூறினார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சேனல் நிர்வாகம், பெப்சி தொழிலாளர்களை அதிகமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.