close
Choose your channels

'தலைவர் 170': முடிகிறது முதல்கட்ட படப்பிடிப்பு.. அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

Monday, October 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கிய நிலையில் இன்றுடன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆனால் ரஜினி சென்னை திரும்ப போவதில்லை என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு நாட்களில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நடைபெற இருப்பதால் அந்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தான் அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், ஜிஎம் சுந்தர், விஜய் டிவி ரக்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மேலும் சில நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், பகத் பாசில் மற்றும் ரானா டகுபதி நடிக்க உள்ளனர் என்றும் அதேபோல் ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது

அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.