close
Choose your channels

'இது நடந்தால் மட்டுமே இரண்டாம் பாகம்; 'வெந்து தணிந்தது காடு' குறித்து கெளதம் மேனன்

Saturday, September 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் டிரைலரின் முடிவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த குறிப்பு இருந்தது என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கூறிய இயக்குனர் கௌதம் மேனன், ‘முதல் பாகத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் இரண்டாம் பாகத்திற்கான அடிப்படை கதையை ஆலோசனை செய்து வைத்துள்ளோம் என்று முதல் பாகம் வெற்றிகரமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டால் நிச்சயம் இரண்டாம் பாகம் உருவாகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாம் பாகம் என கௌதம்மேனன் கூறியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.